புதிய இடுகைகள்

Thursday, February 25, 2010

அஜீத் விவகாரம்: திருமாவளவன்! (NeW)

அஜீத் விவகாரத்தில் ஜாகுவார் தங்கத்திற்கு நேரில் சென்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

முதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாரட்டு விழாவில் காவேரி பிரச்சனை, இலங்கை பிரச்சனைகளூக்கெல்லாம் குரல் கொடுப்பதற்காக நடிகர்களை மிரட்டி அழைக்கிறார்கள் என்று பேசினார் நடிகர் அஜீத்.

இது குறித்து ஸ்டண்ட் இயக்குநர் ஜாகுவார் தங்கம் நக்கீரன் வாரமிருமுறை இதழில் ஒரு ஹீரோன்னா மக்களுக்கு நல்லது சொல்றவனா இருக்கனும் என்று அஜீத்தை சாடியிருந்தார்.

இதனால் அஜீத் ரசிகர்கள் தன்னை மிரட்டி வருவதாகவும், தன் காரை உடைத்துவிட்டதாகவும் புகார் கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தில் தமிழ் உணர்வாளர்கள் தனக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் ஜாகுவார் தங்கம்.

இந்நிலையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஜாகுவார் தங்கத்தின் வீட்டிற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

மேலும், அவர் நேற்றைய தாக்குதலின் போது காயமுற்ற ஜாகுவாரின் மனைவியை நலம் விசாரித்தார்.


நடிகர் சங்கம் நோட்டீஸ்

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரை ஜாகுவார் சந்தித்து இச்சம்பவம் பற்றி மனு கொடுத்தார். அஜீத் தூண்டுதலில் அவரது ரசிகர்கள் என் வீட்டில் தாக்குதல் நடத்தி உள்ளனர் என்றும் அஜீத் மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

ஜாக்குவார் தங்கம் சில படங்களில் நடித்துள்ளார். நடிகர் சங்கத்திலும் உறுப்பினராக உள்ளார். சங்க உறுப்பினர் என்ற வகையில் அவரது மனுவை நடிகர் சங்கம் பரிசீலித்தது.

ஜாக்குவார் தங்கம் குற்றச்சாட்டு பற்றி அஜீத்திடம் விளக்கம் கேட்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு நோட்டீஸ் தயாராகி வருகிறது. இன்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.

அதற்கு அஜீத் பதில் அனுப்பியதும் அதை பரிலீசித்து நடிகர் சங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.


அஜீத் படத்தை திரையிடுவதா, வேண்டாமா?

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில்,

’’தமிழர்களை வைத்து சம்பாதித்த நடிகர் அஜீத்குமார், தமிழர்களுக்கு எதிராக பேசி வருகிறார். காவிரி நீர் பிரச்சினைக்காக நடைபெற்ற போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார்.


அவர் சோர்வாக இருந்தால், நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டியதுதானே...தொடர்ந்து ஏன் நடிக்க வேண்டும்?

அஜீத் தன் கருத்தை திரும்ப பெற வேண்டும். இந்த பிரச்சினை பற்றி விவாதிக்க மார்ச் 3-ந் தேதி, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.

அஜீத் படத்தை திரையிடுவதா, வேண்டாமா? என்பதை அந்த கூட்டத்தில் முடிவு செய்வோம்’’என்று கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க...

Thursday, February 11, 2010

முதல்ல யோசி!

'மாத்தி யோசி' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சத்யம் காம்ப்ளக்சில் நடந்தது. மருந்துக்கு கூட ஒரு நடிகையும் மேடையில் இல்லை. ஆனாலும் கலந்து கொண்ட விவிஐபிகள் உழைப்பு, போராட்டம், வெற்றி என்ற நம்பிக்கைகளை பற்றி பேசிக் கொண்டிருந்ததால் அலுப்பு தட்டாமல் விழா நகர்ந்தது.

"நானும் ரவிராதாவும் (இந்த படத்தின் இயக்குனர் நந்தா பெரியசாமியின் இயற்பெயர் இதுதான்) ஒரே ரூம்ல தங்கி ஒண்ணா கஷ்டப்பட்டவங்க. எப்போதும் கலாட்டவாகவே பேசிக் கொள்வோம். மாத்தி யோசின்னு டைட்டிலை அவன் சொன்னதும் முதல்ல யோசிடா. மாத்தி யோசிப்பதை பற்றி அப்புறம் பேசலாம்னு கலாட்டா பண்ணினேன். இந்த ட்ரெய்லரை பார்த்த பிறகு விளையாட்டுக்கு கூட அப்படி பேசக் கூடாதுன்னு புரிஞ்சுகிட்டேன்" என்றார் இயக்குனர் லிங்குசாமி.

"இன்றைக்கு எடிட்டர் ஆன்ட்டனியை பிரமாதமா பேசுறோம். எடிட்டர் கணேஷ்குமார் காலத்தில் அவர் 100 ஆன்ட்டனிக்கு சமம். வாழ்வே மாயம் மாதிரி நு£ற்றுக்கணக்கான படங்கள் அவரோட கைவண்ணத்தில் அற்புதமா வந்திருக்கு. ஆவிட் எடிட்டிங் இல்லாத காலத்திலேயே சாதித்தவர் அவர். சினிமாவுக்காக தன்னையே பலி பீடம் ஆக்கிக் கொண்டவரோட மகன் ஹரிஷை இன்னைக்கு ஹீரோவாக்கியிருக்கிறார் நந்தா பெரியசாமி. நாங்க செய்யணும்னு நினைச்சதை அவரு செஞ்சிருக்காரு. அதுக்காக நன்றி" என்றார் வசந்தபாலன்.

"பெரிய நடிகர்கள், பெரிய பேனர் இருந்தால்தான் படம் ஒடும்ங்கிற காலம் போயிருச்சு. இன்று மாற்று சினிமா வந்திருச்சு. ஒரு நல்ல புதுமுகத்தையும் நல்ல ஸ்கிரிப்டையும் வச்சு யாரு வேணா ஜெயிக்கலாம்ங்கிற காலம் வந்திருக்கு. இந்த மாற்று ரசனையை ஏற்படுத்திய பத்திரிகைகளுக்கும், மக்களுக்கும் நன்றி சொல்லணும் என்ற வசந்தபாலன், ஒரு வகையில் நானும் நந்தா பெரியசாமியும் ஒரே மாதிரிதான். எங்கள் முதல் படம் தோல்வியடைந்தபின் பெரிய போராட்டத்திற்கு பிறகுதான் ரெண்டாவது படத்தையே இயக்க முடிஞ்சுது. எனக்கு இரண்டாவது படத்தில் கிடைத்த மாதிரி அவருக்கும் இரண்டாவது படமான இந்த 'மாத்தி யோசி' பெரிய வெற்றி பெறும்" என்றார் உள்ளன்போடு.

மேலும் வாசிக்க...

Tuesday, February 09, 2010

இவரு எந்த கார்த்தி?

தமிழ் சினிமாவில் மலிந்து கிடக்கிறார்கள் கார்த்திக்குகளும், கார்த்திகாக்களும். பருத்திவீரன் கார்த்தி, பழைய நடிகர் கார்த்திக், கொல கொலயா முந்திரிக்கா கார்த்தி என்று ஏகப்பட்ட குழப்பம். மகளிர் அணி மட்டும் மட்டமா? திண்டுக்கல் சாரதி கார்த்திகா, து£த்துக்குடி கார்த்திகா, ராதா மகள் கார்த்திகா என்று ரவுண்டு கட்டுகிறார்கள். இந்த பெயர் குழப்பம் திருச்சி நகர இன்டலிஜென்ஸ் போலீஸ் வட்டாரத்தையை குழப்பி குட்டையை கலங்கடித்துவிட்டதாக தகவல்.

ஆயிரத்தில் ஒருவன் பிரமோஷனுக்காக திருச்சி சென்ற கார்த்தி, தான் வரும் தகவலை யாரிடமும் சொல்லாமல் திடீர் தியேட்டர் விசிட் அடித்துவிட்டார். விஷயத்தை கேள்விப்பட்ட நிருபர்களும் பாய்ந்தடித்துக் கொண்டு ஓடினார்கள். அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் நிறைந்திருக்கும் ஒரே கேள்வி, "உங்களுக்கு யாரு கூட லவ் என்பதுதானே?" திருச்சி நிருபர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. "தமன்னாவுக்கும் உங்களுக்கும் லவ்வாமே" என்றொரு கேள்வியை கேட்க, "அப்படியெல்லாம் இல்லை" என்று சமாளித்தார் கார்த்தி.

இவரது வருகையை லேட்டாக தெரிந்து கொண்டு தியேட்டருக்கு ஓடிய இன்டலிஜென்ஸ் போலீசாருக்கு, கார்த்தி கிளம்பிவிட்டார் என்ற தகவலே மிஞ்சியது. சரி, போகட்டும். நிருபர்களிடம் "அவர் என்ன சொன்னார்?" என்று விசாரிக்க, "தமன்னாவுடன் காதல் இல்லைன்னு சொன்னார்" என்றார்கள் நிருபர்கள். போலீசார் நினைத்தது அரசியல்வாதி கம் நடிகர் கார்த்தியை. "அவரு ஏங்க தமன்னாவை லவ் பண்ணுறாரு?" என்றார்களாம் அதிர்ச்சியோடு.

நாட்டிலே லட்சக்கணக்கான பெயர்கள் இருக்க, ஒரே பெயருக்கு போட்டி போட்டால் இப்படிதான் ஆகும் போலிருக்கு!

மேலும் வாசிக்க...

Tuesday, January 26, 2010

சத்தியராஜுக்கு திரிஷா மகள் முறை!

தமிழ் நாட்டில் திரிஷாவின் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. திரிஷா மறுபடியும் தமிழ் சினிமாவிற்கு வரப்போகிறார்.

எங்குமே நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் மறுபடியும் தமிழுக்கு திரும்பி வந்த த்ரிஷா, இப்போது சத்யராஜ்க்கு மகளாக சிவப்புசாமி படத்தில் நடிக்கிறார். ‘சங்கம்’ என்னும் தெலுங்குப்படத்தில் திரிஷாவும் கோபிசந்த் ஜோடியாக நடிக்கிறார்கள்.. அதை அப்படியே தமிழில் எடுக்கப் போகிறார்கள். அந்தப் படத்திற்கு சிவப்புசாமி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இந்த படத்தில் சத்தியராஜ் வெயிட்டான கேரக்டரில் வருகிறார். இந்த படத்தின் இயக்குனர் சிவா. இசை தமன். ஒரு இளைஞனும் ஒரு அழகான பொன்னும் காதலிக்கிறார்கள். ஆனால் இருவர் குடும்பத்தில் ஒரு பிரச்சனைகள் இருக்கிறது. பிரச்சனையை சமாளித்து கோபிசந்த் எப்படி திரிஷாவை மணக்கிறார் என்பதுதான் கதை. இதில் சத்தியராஜ் அப்பாவாக நடிக்கிறார்.

மேலும் வாசிக்க...

குட்டி - குட்டி

மனசுல 'குட்டி'யூண்டு இடம் கூட தேவையில்லை. என் ஒன் சைட் லவ்வை ஃபீல் பண்ணா போதும்! இப்படி தான் விரும்பும் பெண்ணிடம் தீர்மானமாக சொல்லும் காதலன்! அடித்து, துவைத்து, துடிக்க துடிக்க தொங்கப் போட்ட தமிழ்சினிமாவின் 'முக்கோண' காதலில் இது வேற ரகம்!

ஸ்ரேயாவுக்கும் சமீர் தத்தானிக்கும் லவ். கிட்டதட்ட வன்முறை மூலம் மடக்கிப் போட்ட இந்த லவ்வை, சமீர் முழுசாக ஃபீல் பண்ண விடாமல் குறுக்கே வருகிறார் அதே கல்லு£ரியில் படிக்கும் தனுஷ். நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணுங்க பாஸ். நானும் ஓரமா நின்னு லவ் பண்ணிக்கிறேன் என்ற இவரது தத்துவம், சர்ர்ர்ரியான தத்துபித்துவம். தனது காதலிக்கு என்ன பிடிக்குதோ, அதை செய்து தருவது என் கடமை என்று அவளுக்கு பிடித்த காதலனை அவனோடு சேர்த்து வைக்க துடிக்கும் இந்த கீழ்பாக்க கேஸ், அடிக்கிற லு£ட்டிகள் அத்தனையும் ஜாலி பட்டாசு. காலி டம்ளரில் கல் வீசி, அது கரெக்டாக விழுந்தால் காதல் செட் ஆகும் என்ற புதிய ஜோதிடத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். இனி ஆங்காங்கே கல் பறக்கக்கூடும்.

"உன் காதல் மேல உனக்கு நம்பிக்கை இருக்குல்ல, அப்புறம் என்னை கண்டு ஏன் பயப்படுறே?" என்று ஒரு கேள்வி கேட்டு ஆட்டத்தில் எப்பவும் இருக்கிற மாதிரி வழி ஏற்படுத்திக் கொள்கிறார் தனுஷ். அப்புறம் என்ன? காதலர்கள் சேர்ந்திருக்கும் போதும், பிரிந்திருக்கும் போது, லாஜிக்கோடு பிரசன்ட் ஆகிவிடுகிறார். ஜுரத்தில் கிடக்கும் ஸ்ரேயாவை பார்க்க சமீரோடு தொற்றிக் கொண்டு போகிற தனுஷ், கைவசம் எடுத்துப் போகிற ஆப்பிள் சமாச்சாரங்களை கொடுக்கிற போதும், ஸ்ரேயாவின் பர்த் டே வை ஏக பிரமாதமாக கொண்டாடுகிற போதும், 'இளசுகளை கவர இருபது டிப்ஸ்' என்று புத்தகமே போடுகிற அளவுக்கு பொளந்து கட்டுகிறார்! இவரை சுற்றி எப்பவும் இளம் பெண்கள் இருப்பது மாதிரி காட்சிகள் அமைக்கப்பட்டாலும், அதற்கெல்லாம் பொறுத்தமாகவே இருக்கிறது அவர் செய்யும் சேஷ்டைகளும்.

வெறும் பொம்மையாக வந்து போகாமல் பொறுப்பை உணர்ந்து நடிக்கவும் செய்திருக்கிறார் ஸ்ரேயா. சோகம், மகிழ்ச்சி, ஆற்றாமை, ஏமாற்றம் என்று எல்லா உணர்ச்சிகளையும் ஸ்கிரீன் சேவராக வைத்துக் கொண்டு ஜாலம் காட்டுகிறது அவரது கண்கள்.

எப்பவும் எரிந்து விழுகிற பணக்கார திமிரு சமீர் தத்தானி. காதலித்துவிட்டு போகட்டுமே என்பது மாதிரியே முதல் சில ரீல்களை இவர் தனுஷ§க்கு தாரை வார்த்துவிட்டு ஊருக்கு போகிறார். ஒரு காட்சியில் தனுஷ் வீசிய கல் டம்பளரில் விழாததற்கு இவர் சந்தோஷப்பட, "உன் காதல் ஜெயிக்கணும்னு நினைச்சுதான் கல்லை போட்டேன்" என்று தனுஷ் கூறுகிறாரே, செம கிளாப்ஸ் தியேட்டரில்.

கவுண்டரை பின்பற்றுகிறேன் பேர்வழி என்று துரு பிடித்த அருவாளால் கொத்தி எடுத்திருக்கிறார் ஸ்ரீநாத். சொந்த சரக்கை யூஸ் பண்ணுங்க பாஸ்.

'பட்டணம்தான் போகலாமடி' மெட்டை அப்படியே அடித்திருக்கும் ஒரு பாடலில் தனது திறமையை காட்டி ஆட வைக்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். அப்பாடலும், ஆடியிருக்கும் மேக்னா நாயுடுவும் செமஹாட் மச்சி...

பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு குட்டியில்லை, பிரமாண்டம்!

ஆரம்பத்தில் இழுவை, இடையில் மிதவை, என்று ஜம்ப் அடிக்கிற திரைக்கதை. மித்ரன் ஆர் ஜவஹரின் 'மோகினி' ஆட்டம் என்று நினைத்து உள்ளே வந்தால், நன்றாக 'குட்டி' அனுப்புகிறார்கள்.

மேலும் வாசிக்க...

Tuesday, January 05, 2010

> ஜக்குபாய் விவகாரத்தில் ரஜினி பேச்சு!

ஜக்குபாய் படத்தை கள்ளத்தனமாக நெட்டில் ஏற்றிய கும்பலை நோக்கி தனது கோப பார்வையை திருப்பியிருக்கிறது கோடம்பாக்கம். 'ஒற்றுமை நீங்கில் நம்மில் அனைவர்க்கும் தாழ்வு' என்ற மனப்பான்மையோடு கூடிய பெருந்தலைகள் தங்களின் வேதனையையும் ஆதங்கத்தையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தினார்கள்.

ஃபோர் பிரேம்ஸ் தியேட்டரில் சரத்குமாரின் பிரஸ்மீட் என்றுதான் பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு. போனவர்களுக்கு நிஜமாகவே அதிர்ச்சி. தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாராயணன், பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், ரஜினி, கமல், சரத்குமார், ராதிகா, சூர்யா, ஸ்ரீபிரியா, சேரன், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கூடியிருந்தனர்.

"நெருப்பு எப்படி நல்லதுக்கும் பயன்படுகிறதோ, தீயவற்றிற்கும் துணை போகிறதோ, அப்படிதான் டெக்னாலஜியும். வளர்ந்து வருகிற டெக்னாலஜிக்கு முன் இதுபோன்ற திருட்டுகளை தடுக்க முடியாது என்கிறார்கள். ஆனால் இதை அனுமதிக்க முடியாது. எப்படியாவது தடுத்து நிறுத்துவோம்" என்றார் இராம.நாராயணன்.

"ஒவ்வொரு விஷயத்திற்கும் முதல்வரை பார்த்து முறையிடுவதை விட, இதை எப்படி தடுப்பது என்ற வியூகத்தை நாம்தான் வகுக்க வேண்டும். இங்கிருந்துதான் போயிருக்கிறது. நமது திரையுலகை சார்ந்தவர்கள்தான் இந்த செயலுக்கு துணை போயிருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதை கண்டறிந்து களையெடுக்க வேண்டும். தண்டனை கொடுக்க வேண்டும். என்னுடைய விக்ரம் படம் திருட்டு விசிடியில் வந்தபோது முதல்வர் எம்ஜிஆரிடம் முறையிட்டேன். சம்பந்தப்பட்ட ஆளை சிறையில் போட்டார்கள். ஆனால் மறுநாளே அவர் வந்துவிட்டார். அதனால் இந்த விஷயத்தில் சட்டத்தையும் கடுமையாக்க வேண்டும்" என்றார் கமல். அவர் சொன்ன இன்னொரு விஷயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டியதாக இருந்தது. "இதுபோன்ற விவாதங்களை நமக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். மீடியாவை அழைத்து வைத்துக் கொண்டு அவர்கள் முன் விவாதிப்பது சரியல்ல. நாம் ஒரு முடிவை எடுத்து அதன்பின் அவர்களை அழைத்து அறிவிக்க வேண்டும். அதுதான் சரி" என்றார்.

"ஜக்குபாய் படத்தின் கதை அற்புதமான கதை. அந்த டைட்டிலை தேர்வு செய்யவே எங்களுக்கு இரண்டு மாதங்கள் ஆனது" என்று கூறிய ரஜினி, படத்தின் முழு கதையையும் சொல்லிவிட்டதுதான் அதிர்ச்சி. "சரத்குமார் என்னிடம் வந்து இந்த படத்தை பற்றி நீங்கள் பேசினால் உங்கள் ரசிகர்களும் படம் பார்க்க வருவார்கள் என்றார். நல்ல கதையம்சம் உள்ள படத்திற்கு இது தேவையில்லை. படம் நன்றாக இருந்தால் யார் சொல்லாவிட்டாலும் தியேட்டருக்கு வருவார்கள்" என்ற ரஜினி, சரத்திற்கு சொன்ன இன்னொரு விஷயம் நிஜமாகவே ஆறுதல்.

"இந்த படம் திருட்டு விசிடியில் வந்துவிட்டது என்று கவலைப்படுகிறீர்கள். அதே நேரத்தில் இந்த விஷயம் குறித்த சர்ச்சை பத்து கோடி ரூபாய்க்கு விளம்பரம் செய்தாலும் கிடைக்காத விளம்பரத்தை கொடுத்திருக்கிறது. ஜக்குபாய் திரைக்கும் வரும்போது ரசிகர்கள் திரளாக வந்து பார்ப்பார்கள்" என்றார். கடைசியாக ரஜினி கேட்டுக் கொண்டது "இனியும் தாமதிக்காமல் படத்தை வெளியிடுங்கள்" என்பதைதான்.

பேசும்போது தனது அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் தேம்பினார் ராதிகா.

மேலும் வாசிக்க...

> விஷால் - அஜீத் மோதல்!

பேச்சு வார்த்தை முடிந்து சன் பிக்சர்ஸ் கைக்கு போய்விட்டது தீராத விளையாட்டு பிள்ளை. விஷாலின் பேரார்வம் இந்த படம் பொங்கலுக்கு வர வேண்டும் என்பதுதான். ஆனால், ரிலீஸ் தேதியை நாங்கள்தான் முடிவு செய்வோம். அதில் தலையிடக் கூடாது என்ற நிபந்தனையோடுதான் இந்த படத்தையே வாங்கினார்களாம் சன்னில்.

“இப்போ இருக்கிற சூழ்நிலையில் எந்த ஹீரோ நடிச்ச படமும் அதிக பட்சம் ஐந்து வாரம்தான். அதுக்கு பிறகு 100 நாட்கள் ஓடும் என்பதெல்லாம் ஒரு பேச்சுக்கு சொல்லப்படுகிற வார்த்தைதான்” என்று ஒரு விழாவில் வெளிப்படையாக பேசினார் சன் பிக்சர்ஸ் சக்சேனா. இந்த ஐந்து வாரங்களுக்கு தேவையான விளம்பரங்களை விதவிதமாக வெளியிட்டு ரசிகர்களை கவர்கிற அவர்களது யுக்திக்குதான் திரையுலகம் அடிமையாகி கிடக்கிறது. இந்த நேரத்தில் விஷால் எடுத்திருக்கும் இந்த முடிவு புத்திசாலித்தனமானது என்கிறார்கள் திரையுலகில்.

அது போகட்டும்... திரையுலகத்தினரின் யூகத்தின்படி தீ.வி.பி என்போதுதான் திரைக்கு வருமாம்? அஜீத்தின் அசல் திரைக்கு வரும்போது இப்படமும் வரும் என்கிறார்கள்.

தலயும் தளபதியும் போட்டியிட்ட காலமெல்லாம் போச்சா?

மேலும் வாசிக்க...